காலியாகும் காங்கிரஸ் கூடாரம்.. மொத்தமாக ஆளுங்கட்சிக்கு தாவும் எம்எல்ஏக்கள்... அதிர்ச்சியில் ராகுல் காந்தி.!!
11 congress mla join trs
கடந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அதன்பிறகு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் முதல்வராக பதவியேற்றார்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒருவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தற்போது எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 11 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து தங்களை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணைக்க கோரினர். இதற்கிடையே மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவான ரோஹித் ரெட்டி, சந்திரசேகர் ராவ் மகனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
காங்கிரசில் மொத்தம் உள்ள 18 எம்எல்ஏக்களின் வெளியேற விரும்புவர்களின் எண்ணிக்கை 11 ஆக உள்ளதால் கட்சி தாவல் தலைசட்டத்தல் இந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது.