திருமணத்தில் இந்த பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியம்...!! - Seithipunal
Seithipunal


பத்து பொருத்தங்களில் முக்கியமாக கருதப்படுவது ரஜ்ஜூ பொருத்தமாகும். கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப்படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக அவசியம்.

திருமண வாழ்வின் நீண்ட மற்றும் குறுகிய ஆயுளை ரஜ்ஜூ பொருத்தம் தீர்மானிக்கிறது. இதை நாட்டுப்புற வழக்கில் சரடு பொருத்தம் என்றும் கூறுவார்கள். ஏனைய பொருத்தம் அமைந்து இந்த ரஜ்ஜூ எனும் மாங்கல்ய சரடு பொருத்தம் இல்லையெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரஜ்ஜூ மட்டுமே பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்டு அமையும்.

நட்சத்திரங்கள் ஐந்து வகை ரஜ்ஜூ என பிரிக்கப்பட்டு உள்ளன. அவை 

பாதம்

தொடை

உதரம்

கண்டம்

சிரசு

நட்சத்திர மண்டலத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொண்டு அவன் பாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தையும், தொடையில் பரணி, வயிற்றில் கார்த்திகை, கழுத்தில் ரோகிணி, தலையில் மிருகசீரிடம் என நட்சத்திரங்களை ஏறுமுகமாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேல் நோக்கி செல்பவைகளை ஆரோகணம் என்றும், கீழ்நோக்கி வருபவைகளை அவரோகணம் என்றும் சொல்வார்கள்.

சிரசு ரஜ்ஜூ - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

கண்ட ரஜ்ஜூ - ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்

உதரம் ரஜ்ஜூ : கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி

தொடை ரஜ்ஜூ - பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி

பாதம் ரஜ்ஜூ - அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி

இரண்டில் ஒன்று ஏறுமுகமாகவும், மற்றொன்று இறங்கு முகமாகவும், ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் அமைந்தால் உத்தமமான பொருத்தம்.

ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் இரண்டும் ஏறுமுக ரஜ்ஜூவாக அமைந்தாலும் ஓரளவு நன்மையே.

இரண்டும் ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் இறங்கு முக ரஜ்ஜூ எனில் மத்திமமான பலன்கள் உண்டு.

இதில் ஆண், பெண் ஒரே ரஜ்ஜூவாக இருந்தால் இணைக்கக்கூடாது.

ஆண், பெண் ஒரே ரஜ்ஜூவாக அமைந்து அதில்,

1. பாத ரஜ்ஜூ எனில் ஒரே ஊரில் ஒரே இடத்தில் வாழ விடாமல் அலைய வைக்கும். ஒரே இடத்தில் தொழில் செய்பவர்களுக்கு தொழில் மாற்றம், இடமாற்றம், என பல பிரஜ்ஜூனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

2. தொடை ரஜ்ஜூ எனில் தாம்பத்ய உறவில் சுகமான மனநிறைவை உண்டாக்காது. பண நஷ்டம் உண்டாகும். அதனால் மன வேற்றுமைகள் உண்டாகலாம்.

3. உதரம் ரஜ்ஜூ எனில் புத்திர பாக்கியத்தில் சிக்கலை உண்டாக்கும்.

4. கண்டம் ரஜ்ஜூ எனில் குறுகிய கால மனவாழ்வு அமையலாம்.

5. சிரசு ரஜ்ஜூ எனில் கணவரின் ஆயுள் பலம் குறைவாக அமையலாம்.

சில விதிவிலக்காக, ரஜ்ஜூ பொருத்தம் இல்லையென்றாலும், மாங்கல்ய ஸ்தானம் நன்றாக இருந்தது என்றால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். 7ஆம் இடம், 8ஆம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தாலோ, சுப ஆதிபத்திய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7, 8ஆம் இடங்களை சுப கிரகங்கள் பார்வையிட்டாலோ ரஜ்ஜூ பொருத்தமே இல்லையென்றாலும் துணிந்து திருமணம் முடிக்கலாம். ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumana poruththam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->