வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவித்து கொண்டிருப்பவரா.? - Seithipunal
Seithipunal


வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை முழு லட்சியமாக கொண்டிருப்பவரா நீங்கள்?

வெற்றியின் படியில் ஏற சோதனைகளை கடந்துதானே ஆக வேண்டும்.

இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனைகள் ஏற்படும்போது நாம் முதலில் கட்டுப்படுத்த வேண்டியது நம் மனதைதான்.

ஏனெனில், நாம் ஒரு செயலில் வெற்றி பெற முயற்சிக்கும்போது சிறு தடை ஏற்பட்டாலும் முதலில் நெகட்டிவாக யோசிப்பது மனம்தானே.

இப்படி நினைத்தால் யாராலும் வாழ்வில் நிச்சயம் முன்னேற முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

எப்போதும் மனதில் பாசிட்டிவ்வாக யோசித்தால், எந்தவொரு செயலையும் துணிந்து செய்யலாம்.

ஒருமுறை மனதில் நெகட்டிவ்வாக நினைத்துவிட்டால் அதை சீக்கிரம் நம்மால் மறக்க முடியாது.

தோல்வியை பலவீனமாக பார்க்காமல், பலமாக பாருங்கள்.

வாழ்வில் வெற்றியை நோக்கி முன்னேற என்ன செய்ய வேண்டும்?

வாழ்வில் முன்னேறும்போது நிறைய பேர் நிறைய விஷயங்களை சொல்வார்கள். அவர்கள் சொல்வது நமது நலத்திற்காகவே இருக்கும் என எண்ணிக் கொள்ளுங்கள்.

செய்யும் செயலில் தடைகள் ஏற்பட்டால் தளர்ந்துவிடாதீர்கள். எண்ணத்தில் மட்டும் முழு கவனத்தைக் கொண்டு வாழ்வை மேற்கொண்டால், வெற்றியை நிச்சயம் அடையலாம்.

எப்போதும் உங்கள் உள்ளம் சொல்வதைக் கேளுங்கள். மற்றவர்கள் கூறுவதை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

நீங்களே சுயமாக முடிவெடுக்க கற்றுக்கொள்ளுங்கள். இதுவரை உங்கள் பெற்றோர்கள் முடிவெடுத்து இருப்பார்கள். இப்போது நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள். இதுதான் நீங்கள் சுயமாக உங்கள் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம்.

இந்த வேலையை என்னால் செய்ய முடியவில்லை என எண்ணாதீர்கள். இன்று செய்ய முடியாமல் போகலாம். ஆனால், நாளை நிச்சயமாக வேலையை உங்களால் செய்ய முடியும்.

உங்களை பிடிக்காத, உங்களை கவிழ்க்கும் வேலைகளை செய்யும் நபர்களை சமாளிக்கும் தந்திரங்களை கற்றுக் கொண்டு அதனை செயல்படுத்துங்கள்.

எப்போதும் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். யோசிக்காமல் பேசும் சில வார்த்தைகள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கலாம்.

உங்கள் லட்சியத்தை எந்த சூழ்நிலையிலும்; விட்டுக் கொடுக்காதீர்கள். இன்று வெற்றிகரமான நபர்களாக இருப்பவர்கள் எல்லாம், தங்கள் குறிக்கோளை விட்டுக் கொடுக்காமல் உழைத்தவர்கள்தான்.

நம்மை விட வயதில் மூத்தவர்கள், அனுபவஸ்தர்கள் சொல்லும் அறிவுரையை உதாசினப்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். அனுபவத்தைவிட ஒரு சிறந்த வழிகாட்டி இருக்க முடியாது.

வாழ்க்கையில் முன்னேறும்போது தோல்விகளை சந்தித்துதான் ஆக வேண்டும். 'தோல்விதான் வெற்றியின் முதல் படி".

தோல்விகளை சந்திக்க சந்திக்க அனைத்தையும் எதிர்த்து நின்று, தைரியமாக செல்ல முடியும். இதனால் வெற்றியையும் எளிதில் அடைய முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

progress in life


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->