சமையல் செய்த நேரத்தில், கர்ப்பிணிக்கு ஏற்பட்ட சோகம்.! 16 நாட்களாக துடித்த பரிதாபம்.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பாஜி என்பவர் மேலை இசைக் கலைஞராக இருக்கிறார். இவருக்கு 25 வயதில் அருள்மொழி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகின்றது.

அருள்மொழி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இன்னிலையில், சென்ற மாதம் 30ஆம் தேதி அருள்மொழி விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டே இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் அவர் எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றி படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம்பத்தினரால் மீட்கப்பட்டு அவர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அருள்மொழி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்குத் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் மட்டுமே ஆவதால் தஞ்சை ஆர்டிஓ சுரேஷ் தனி விசாரணை நடத்தி வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant lady in kitchen incident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->