நாவூறும் கேழ்வரகு - கேரட் ஊத்தப்பம்!! எளிமையாக செய்வது எப்படி!! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - தேவையான அளவு, 
கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு 
கேரட் - 3
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2

செய்முறை :

முதலில் கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு உப்பு சேர்த்து கலந்து தோசை மாவை விட சற்று திக்காக கரைத்து புளிக்க விடவும்.

மற்றொரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய கேரட் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானதும், மாவை கல்லில் ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

ஊத்தப்பத்தின் மீது, கலந்து வைத்துள்ள கேரட், வெங்காய, மிளகாய் கலவையை தேவையான அளவு தூவி, நன்கு வேக விடவும்.

தோசை ஒரு பக்கம் வெந்ததும், அதை மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.

இருபுறமும் நன்கு வெந்ததும் சூடாக  எடுத்து பரிமாறவும். 

மேலும் கேழ்வரகு - கேரட் ஊத்தப்பத்தை தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகளுடன் உண்டால் சுவையாக இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare kezhvaragu carrot oothappam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->