மலச்சிக்கலை விரைவில் உடனடியாக முடிவிற்கு கொண்டு வர பப்பாளி - இஞ்சி சூப்.!!
how to control malachikkal problem by natural method of papaya ginger juice
இன்றுள்ள நிலையில் நாம் பெரும்பாலும் பணி சூழல்கள் மற்றும் பிற சூழல்களின் காரணமாக துரித உணவகங்களில் அதிகளவு சாப்பிட்டு வருகிறோம். இதன் காரணமாக நமது உடல் நலமும் வெகுவாக பாதிக்கப்பட்டு., பெரும் இன்னல்களுக்கு உள்ளாகிறது.
இந்த பிரச்சனையின் காரணமாக பெரும்பாலானோருக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த மலச்சிக்கல் பிரச்சனை இன்றுள்ள பலருக்கு இருக்கும் நேரத்தில்., மலச்சிக்கல் பிரச்சனையை எளிதில் குணப்படுத்த செய்யும் சாறு குறித்து இனி காண்போம்.
தேவையான பொருட்கள்:
பப்பாளி பழம் - சிறியது (பாதியளவு).,
இஞ்சி - சிறிய துண்டு.,
வெங்காயம் - ஒன்று.,
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கிண்ணம்.,
மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப.,
கொத்தமல்லி தழை - சிறிதளவு.,
கிரீம் - சிறிதளவு.,
உப்பு - தே.அளவு....
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட பப்பாளி பழம் ., இஞ்சி., வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்றாக பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் கடையில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சியை நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிறிதளவு மிளகு தூள் மற்றும் பப்பாளியை சேர்த்து வதக்கி., மிக்ஸியில் சேர்ந்து அரைத்து எடுத்து கொண்டு., பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்கறி வேக வைத்த நீருடன் சேர்த்து., உப்பு சேர்த்து கொதிக்க வைத்து சூப் போல பருகினால் உடலுக்கு உகந்த பப்பாளி இஞ்சி சாறு தயார்..
இதனுடன் மிளகு தூள்., கொத்தமல்லி தலை மற்றும் கிரீமை சேர்த்து பருக விரும்புபவர்கள் சேர்த்து பருகலாம்..
English Summary
how to control malachikkal problem by natural method of papaya ginger juice