கழுத்து பகுதியில் உள்ள கருமை உங்கள் அழகை கெடுக்கிறதா?
beauty tips 12
சிலருக்கு முகம் என்னதான் அழகாகவும், நிறமாகவும் இருந்தாலும் கூட கழுத்தில் உள்ள கருவளையங்கள் அவர்களது அழகையே சீர்குலைப்பதாக இருக்கும். கழுத்தில் உள்ள கருமையானது, வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் போன்றவற்றை அணிவதாலும் அந்த இடம் கருமையாகிவிடுகிறது.
கழுத்தில் உள்ள கருமை நீங்க வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை கொண்டு எப்படி சரி செய்வது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பப்பாளிப்பழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் இவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.
தயிரை கழுத்து பகுதியில் மெதுவாக தேய்த்து ஊறவைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து சுடுதண்ணீரில் கழுத்து பகுதியை அழுத்தி துடைக்கவும். இவ்வாறு செய்வதால் கழுத்தில் இருக்கும் கருப்பு மறையும்.
கழுத்து பகுதியில் உள்ள கருமையை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் மாற்றம் உண்டாகும்.
தினமும் இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவலாம். இப்படி தினமும் செய்து வந்தால், கருமை நீங்கும்.
பாதி எலுமிச்சையை பழத்தை பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை அகலும்.