90s கிட்ஸ், மலரும் நினைவுகள்.! வாருங்கள் ஒருமுறை திரும்பி பாப்போம்.!
90s kids old memories
என்னதான் நாளுக்குநாள் டெக்னாலஜி வளர்ந்தாலும் 90களில் பிறந்தவர்கள் அனுபவித்த சந்தோஷங்களை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது.
90'ஸ் கிட்ஸ் என்றதும் பலருக்கு ஆனந்த புன்னகை வெளிவரும். நீங்களும் 90'ஸ் கிட்டா? நானும் அதேதான் என்று பலர் ஹைஃபை போட்டுக்கொள்வார்கள்.
மறைந்து போனாலும் இன்னும் பலரது நினைவுகளில் மறந்து போகாத பொக்கிஷ நிகழ்வுகளை 90களில் பிறந்தவர்கள் மட்டுமே அறிந்து இருப்பார்கள். 80களிலும், 90களிலும் பிறந்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள் என்றே கூறலாம்.
திரும்பி பார்ப்போம் நாம் நம்பிய பொய்கள்:
பொய் சொன்னா சாமி கண்ண குத்தும்.
வெத்தலை, பாக்கு போட்டால் மாடு முட்டும்.
தாலி காட்டினா குழந்தை பிறக்கும்.
சாப்பிடலேனா பூச்சாண்டி புடிச்சுட்டு போயிடுவான்.
ஒரு டைம் முட்டுனா தலையில கொம்பு முளைக்கும்.
அரிசி தின்னா கல்யாணத்து அன்னைக்கு மழை பெய்யும்.
எந்த ஆபத்தில் இருந்தாலும் சக்திமான்னு சொன்னா வந்து காப்பாற்றுவார்.
பார்க்க வச்சு சாப்பிட்டா வயிறு வலிக்கும்.
ஒத்த மைனா பார்த்தா ஸ்கூல்ல டீச்சர் கிட்ட அடி விழும்...
ரெட்டை மைனா பார்த்தா லக்கு...
இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது என்ன சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது. திரும்பி பார்த்தா பேய் அடித்துவிடும்.
அப்போ பொண்ணுங்க பக்கத்தில உக்கார வைக்குறதெல்லாம் தண்டனை.
எம்ஆர்எப் ஒரு பேட் தயாரிக்கும் கம்பெனி என்று நம்பினோம். ஆனால், உண்மையில் அது டயர் கம்பெனி.
இடி இடிக்கும்போது அர்ஜூனா அர்ஜூனா என சொன்னால், வந்த இடி நம்மீது விழாது.
பென்சிலை துருவி சுடுகஞ்சியில் போட்டால், விடிவதற்குள் அது ரப்பராக மாறும்.
மயில் தோகையை புத்தகத்தின் நடுவில் வைத்தால், அது குட்டி போடும்.
டிவி, ரேடியோக்களுக்கு உள்ளே குட்டியாக ஆளுங்க இருந்து ஆடுறாங்க, பாட்டு பாடுறாங்க.
கால் கட்டை விரலுக்கு பக்கத்து விரல் பெரிதாக இருந்தால் அந்த பெண் புருசனுக்கு அடங்கமாட்டாள்.
பழங்களை விதையோடு விழுங்கினால் வயிற்றில் செடி முளைக்கும்.
டிவியில மகுடி சத்தம் வந்தால் மியூட் பண்ணனும். இல்லைன்னா வீட்டுக்குள் பாம்பு வந்துவிடும்.
ஆண்களுக்கு தலையில் ரெட்டை சுழி இருந்தால் அவர்கள் பின்னாளில் இரண்டு பொண்டாட்டிக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.
படத்தில் இறப்பவர் உண்மையாகவே இறந்து விடுவார் என நினைத்த காலமும் உண்டு.
முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்தால் குழந்தை பிறக்கும்.
பல் விழுந்துவிட்டால் கூரை மேல் போட்டுவிடவேண்டும். இல்லையெனில் பல் முளைக்காது.
வெயிலும், மழையும் ஒன்றாக வந்தால் காக்காவுக்கும், நரிக்கும் கல்யாணம் நடக்குது.
நாக்கு கருப்பா இருந்தா சொல்லுறது பலிக்கும். இன்னும் ஏராளமான விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்.