பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி இளைஞர் பலி..!! சோகத்தில் மூழ்கிய கிராமம்..!!
Youth death due to drowned in water
நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், கொத்தபட்டியில் வசித்து வருபவர் அமல்ராஜ் இவரது மகன் மதன் குமார் அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 3 ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு நேற்று பிறந்த நாள் இதனை கொண்டாட அவர் அவரது நண்பர்களுடன் வைகை அணை பிக்கப்டேம் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவர்கள் அந்த கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட போது எதிர்பாரதவிதமாக மதன்குமார் நீரில் மூழ்கியுள்ளார்.இதனை கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின அவர்கள் நீரில் மூழ்கிய மதனை போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth death due to drowned in water