இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்..!
vetrilai thulasi soup preparation
பெரும்பாலும் இந்த பிரச்சினைகளை சரிசெய்ய எளிய முறையில் வீட்டில் கிடைக்ககூடிய பொட்களைக் கொண்டே செய்யலாம் இந்த சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுவர்கள் வெற்றிலை துளசி சூப் செய்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
தண்ணீர் - 1 கப்
சீரகப் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை - 5 அல்லது 6 இலைகள்
புளி கரைசல் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
தக்காளி - ஒன்று
சிவப்பு மிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
இஞ்சியை ஒன்றும் பாதியாக நசுக்கிகொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் தண்ணீர் ஒரு கப் (100 மிலி) ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி துளசி இலை, வெற்றிலை ஐந்தாறு இலைகள், புளி கரைசல், நசுக்கிய இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து பக்குவம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி மிளகு தூள் சேர்த்து சூடாக சூப்பைப் பரிமாறவும்.
சத்தான வெற்றிலை துளசி சூப் ரெடி.
English Summary
vetrilai thulasi soup preparation