நாவில் எச்சில் ஊரும் பாஸ்தா பாயாசம்.! செய்வது எப்படி.?
Tasty Pasta payasam
நாவில் எச்சில் ஊரும் பாஸ்தா பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 1 கப்
பால் - 2 1/2 கப்
சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
முந்திரி - 2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின்பி அதில் பாஸ்தாவை சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை பொன்னிறமாக வறுத்து, எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதே பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து, பின் கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும். பாலானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால் டேஸ்டியான பாஸ்தா பாயாசம் ரெடி.