நொடியில் செய்து அசத்தலாம் உருளைக் கிழங்கு சாதம்.!
potato rice preparation
தேவைப்படும் பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 3
மசாலா பொடி தயாரிக்க
தனியா - 2 ஸ்பூன்
மிளகாய் - 5
கடுகு - 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வெந்தையம் - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
தாளிக்க தேவைப்படுபவை :
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ௧ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கொத்தம்மலி கருவேப்பிலை - சிறிதளவு
செய்யும் முறை :
அரிசியை உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொடி தயாரிக்கத் தேவையானப் பொருட்களை எண்ணெய் இன்றி கடாயில் வறுக்கவும். சூடு குறைந்ததும் மிக்ஸியில் மைய அறைந்து கொள்ளவும்.
தற்போது கடாயில் தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புவை போட்டு வதக்கவும்.
அடுத்ததாக காய்ந்த மிளகாய், கறிவேப்பிலைச் சேர்க்கவும்.
தற்போது சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக் கிழங்கை சேர்த்து வதக்கவும். சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.
தற்போது அரைத்த மசாலா பொடியைச் சேர்த்து வதக்கவும்.
உருளைக் கிழங்கு வெந்ததும் ஆற வைத்த சாதத்தை போட்டுக் கிளறவும். இறுதியாகக் கொத்தமல்லி தழை தூவவும்.
சுவையான உருளைக் கிழங்குச் சாதம் தயார். இதற்கு மொறுமொறு அப்பளம், ஊறுகாய் பொருத்தமாக இருக்கும்.