இளம் வயதிலே சரும சுருக்கங்கள் ஏற்படுகிறதா?.! அப்போ இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


சிலருக்கு இளம்வயதிலேயே முகச்சுருக்கம் இருக்கும். அவர்கள் சரும பராமரிப்பிற்காக கடைகளில் கிடைக்கும் செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துவர், அவர்களுக்காக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

 ஆலிவ் ஆயில் - 100 கிராம் ,

ஆளி விதை - 3 ஸ்பூன்

ஆரஞ்சு பழத்தோல் – 1

எப்படி செய்வது:

ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் காய வைத்து அதை மிக்ஸியில் அரைத்து பொடியாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் ஆரஞ்சுத் தோல் பவுடர் கடைகளில் விற்கப்படும் வாங்கிக்கொள்ளலாம். ஆளி விதைகளையும் மிக்ஸியில் அடித்து பொடியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் ஆலிவ் ஆயில் ஊற்றி அதில் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் ஆளி விதை பொடிகளை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து  அதில் எண்ணெய் கலந்து வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் நிமிடங்கள் சூடேறும் வரை அப்படியே வையுங்கள்

10 நிமிடங்கள் கழித்து அந்த எண்ணெய்யை எடுத்து வடிகட்டினால் பொடிகள் இறுகி எண்ணெய் மட்டும் கிடைக்கும். அதனை ஒரு பாட்டிலில் தனியே எடுத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை தூங்கும் முன்பாக முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். காலையில் வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oil For Skin Care


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->