மதுபானம் அருந்துவதை தட்டிக்கேட்ட நபர் வெட்டிக்கொலை.. தஞ்சாவூரில் பரபரப்பு..!
Murder of a person who knocked over alcohol
மது போதையில் நடந்த சண்டையில் கறிகடைகாரர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுபள்ளியில் வசித்து வருபவர் செல்வம்(45). இவர் அதே பகுதியில் கறிகடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவதன்று இரவு சிலர் அவருடைய இறைச்சி கடையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
இதனை கண்ட செல்வம் அவர்களை கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் முற்றவே அவர்கள் வைத்திருந்த அரிவாளால் செல்வத்தை வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த அனந்தகிருஷ்ணனையும் வெட்டியுள்ளனர்.
இதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அந்த பகுதியில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து அங்கு செல்வத்தை பரிசோத்தித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
அனந்த கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை ஒரம் உள்ள மதுபான கடையால் இது போன்ற சட்ட விரோத சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் பொதுமக்கள் அச்சதுடன் இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Murder of a person who knocked over alcohol