அன்னையர் தின வாழ்த்துக்கள்.. தாய்மையைப் போற்றுவோம்.! உலக அன்னையர் தினம்.! - Seithipunal
Seithipunal


அம்மா என்ற மூன்றெழுத்தில்
தன்னுடைய உலகத்தையே ஆளுபவள்:

பூமி சுமக்கும் முன்னே நம்மை 
பூ போல் சுமந்தவள்.,

மரணிப்போம் என்று தெரிந்தும் கூட
மலர் முகம் காண விரும்புபவள்!

என்றுமே இறைவனிடம் தனக்கென்று
நிற்காத ஒரு தியாகச் சுடர்!

வஞ்சியே உன்னை வர்ணிக்க வார்த்தைகள்
எதுவும் இல்லை வாழ்த்துக்கள் மட்டுமே...!

உலகில் வாழும் அனைத்து அன்னையருக்கும் இதயம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்.!

தாய்மையைப் போற்றும் விதமாக இன்று மே 09ஆம் தேதி உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த அன்னா மேரி ஜர்விஸ் தன்னுடைய அன்னைமீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது. 1914ஆம் ஆண்டு இவரின் கடும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் அவர்கள் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை (மே 09) அன்னையர் தினமாக அறிவித்தார்.

தாயின் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார வாய்ப்பு போன்ற சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். தாய் மனதிற்கேற்ப நடந்து, தாயை மகிழ்விக்கக் கிடைத்த ஓர் அரிய நாளாக எண்ணிக் கொண்டாடுவோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

International Mother's day 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->