காலையில் செய்த இட்லி மீதம் இருக்கா?.. அப்போ இத செஞ்சி பாருங்க..! - Seithipunal
Seithipunal


காலையில் செய்த இட்லி சில நேரங்களில் மீந்து போய்விடும்அந்த இட்லியை வீணாக்காமல் சுவையான பஜ்ஜியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர். அதனை எப்படி செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

வேக வைத்த இட்லி,

உருளை கிழங்கு, மிளகாய் தூள்,

 வெங்காயம், சீரகம்,

பஜ்ஜி மாவு,

அரிசி மாவு,

எண்ணெய், உப்பு

செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில், வேக வைத்த உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து இந்த கலவையை வடை போல் தட்டி கொள்ள வேண்டும்.

தற்போது இட்லியை இரண்டாக வெட்டி அதன் நடுவில் வடை போல் தட்டிய மசாலாவை வைத்து கொள்ளுங்கள்.

மற்றொரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி  நன்றாக கரைத்து கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பஜ்ஜி கலவையில், ஸ்டஃப் செய்த இட்லியை போட்டு முக்கி எடுத்து பொறித்தெடுக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Idly Bajji Recipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->