செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு செய்வது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:  

நண்டு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 20
மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
பூண்டு பல் - 8
கத்திரிக்காய் - 2 
தேங்காய் துருவல் - அரை கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

நண்டை கழுவி சுத்தம் செய்து, உப்பு போட்டு பத்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம், தக்காளி, கத்தாpக்காய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் வெங்காயம், கத்தாpக்காய், தக்காளி ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு அதனுடன் மிளகாய் தூள், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்ததும் நண்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு சிவக்க வதக்கி குழம்பில் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லித் தழையை சேர்த்து பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare crab water kulambu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->