க்ளோயிங்கான முகத்தை பெற, இந்த பேஷியல் அவசியம்.!
how to get glowing face
Tamil online news Today News in Tamil
இன்றுள்ள பெரும்பாலான நபர்களுக்கு தங்களின் 30 வயதை கடக்கும் நேரத்தில் முகமானது சுருங்கி, வயதான தோற்றத்தை எளிதில் அடைகின்றனர். இதனை தவிர்ப்பதற்கு அதிகளவில் கடைகளில் கிரீம்களை வாங்கி முகத்தில் பூசுவது வழக்கம்.
அதிகளவு க்ரீம்களை கடைகளில் வாங்கி முகத்தில் பூசுவதன் மூலமாக அந்த அழகு நீண்ட நேரத்திற்கு இருக்காது. இயற்கையாக நாம் செய்யும் சில வழிமுறைகளின் மூலமாக நமது அழகை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கலாம்.
வெண்டைக்காயில் இருக்கும் ஆண்டி-பாக்டீரியல் தன்மையின் மூலமாக நமது முகத்தில் மாசு செய்வதறி குறைத்து, முகத்தில் உண்டாகும் பருக்களை தடுத்து., முகத்திற்கு தேவையான வழவழப்பு தன்மையை வழங்குகிறது. இதன் மூலமாக நமது சருமமும் இளமையுடன் இருக்கிறது.
தேவையான பொருள்கள்:
வெண்டைக்காய் - 5
தயிர் - 1 தே.கரண்டி
செய்முறை:
எடுத்துக்கொண்ட வெண்டைக்காய்களை நன்றாக கழுவி பின்னர் சிறிது சிறிது துண்டுகளாக எடுத்து கொள்ள வேண்டும். வெண்டைக்காயின் காம்புகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் அரைத்து எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு தயிரை சேர்த்து முகத்தில் தேய்த்து பின்னர் சூடான நீரை கொண்டு கழுவினால் முகமானது பொலிவு பெரும். இதனை கை மற்றும் கால்களிலும் சேர்த்து தேய்த்து கொள்ளலாம்.
Tamil online news Today News in Tamil