முகத்தை பொலிவாக்கும் எலுமிச்சை..!!
Face Care tips
பொலிவான சருமத்திற்கு எலுமிச்சை பயன்படும். அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேய்த்தால் சருமம் பளபளக்கும். பாலில் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர சூரிய ஒளியால் ஏற்படும் கருமையான சரும நிறம் மாறும்.
எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை கலந்து முகத்தின் மாஸ்க் போன்று தடவினால் சருமத்தின் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி மென்மையடையும்.
முதல் நாள் இரவில் ஓட்ஸை ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் புளித்த தயிரை கலந்து சருமத்தில் தடவினால் அழுக்கு மற்றும் மாசு ஆகியவற்றை அகற்றி புத்துணர்ச்சி தரும்.
எலுமிச்சை வறட்சி மற்றும் சரும பாதிப்புகளில் இருந்து வெளியேற்ற உதவும்.