முக அழகு பராமரிப்பு தொடர்பாக, பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 மந்திரங்கள்.! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு அழகு என்பது மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது. பெரும்பாலான பெண்கள் செயற்கை முறையிலான அழகுசாதன பொருட்களை உபயோகம் செய்து வருகின்றனர். இவ்வாறான செயற்கை அழகுசாதன பொருட்கள் பிற்காலத்தில் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அழகில் பெண்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் குறித்து இனி காணலாம்.

30 வயதுக்கு முன்பு பேஷியல் கூடாது: 

பெண்கள் தங்களது முக பொலிவை அதிகரிக்கவும், முகத்தினை மென்மையாக்கவும் பேஷியலை உபயோகம் செய்கின்றனர். இன்று நடைமுறையில் உள்ள வீணான விளம்பரத்தில் வரும் பேஷியல்கள் உண்மையில் 15 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு தேவையே இல்லாதது. 

இளம் வயதில் பெண்களுக்கு முகத்தில் இயல்பாகவே அழகு அதிகரித்து காணப்படும். முகமும் அழகாகவும், மென்மையாகவும் காணப்படும். இரவுப்பணிகளை மேற்கொண்டு வரும் பெண்களுக்கு முகத்தில் சுருக்கம், இறுக்கம் போன்றவை தோன்றினால், பழங்களை பயன்படுத்தி புரூட் பேசியல் மேற்கொள்ளலாம்.

வாக்சிங் குறைக்க வேண்டும்: 

நரைமுடியை மறைப்பதற்கு பயன்படும் டை புற்றுநோயை உருவாக்கக்கூடியது என மருத்துவ ஆய்வுகளின் தரவுகள் தெளிவுபடுத்துகிறது. டைகளில் இருக்கும் ரசாயனங்கள் முடியை பலவீனப்படுத்தி, சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். டை பூசி வந்தால் சருமத்தின் நிறம் மாற்றமடையும். 

பெண்கள் ஒரு முறை வாக்சிங் செய்துவிட்டு சருமத்திற்கு நான்கு முதல் 6 வாரம் வரை காலஅளவு கொடுக்கலாம். உரோமம் வளர்ந்ததும் வாக்சிங் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அடிக்கடி வாக்சிங் செய்தால் சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டு, பருக்கள் உண்டாகும். 

இரசாயனம் கூந்தலுக்கு வேண்டாம்:

மினுமினுப்புடன், அழகாக கூந்தல் காட்சிகளிக்க வேண்டும் என்று ஸ்ட்ரெயிட்டனிக், சுமூத்தினிங் போன்றவற்றை பெண்கள் மேற்கொள்கிறார்கள். இவைகளில் பயன்படுத்தும் இரசாயனங்கள் கூந்தலை பலவீனப்படுத்தி வறட்சியை உருவாக்கும். இதனால் கூந்தல் விரைவாக முறிந்துபோகும். இதனை அடிக்கடி செய்து வந்தால் மண்டை ஓட்டின் ஆரோக்கியம் பாதிப்பிற்கு உள்ளாகி, சொறி போன்ற பிரச்சனைகள் தோன்றும். 

அழகுநிலையத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை தேவையில்லை: 

முகத்தில் இயல்பாக தோன்றும் புள்ளிகள், பருக்கள் மற்றும் படைகளை கூட தற்போது அழகு நிலையத்திற்கு சென்று தான் நீக்கி வருகிறார்கள். உண்மையில் அவர்கள் மருத்துவர்கள் கிடையாது. சரும நோய்க்கான மருத்துவரிடம் சென்றே அந்தந்த சிகிச்சை பெற வேண்டும். 

ப்ளீச்சிங் வேண்டாம்: 

பெண்களுடைய முகத்தில் உள்ள கருப்பு நிற உரோமங்களை நிற வித்தியாசத்தை ஏற்படுத்த பிளீச்சிங் உதவுகிறது. ஆனால், இது முகத்திற்கு நல்ல நிறத்தை தரும் என்றாலும், இதில் உள்ள இரசாயன பொருட்கள் முகத்தின் சருமத்திற்கு தீங்கை ஏற்படுத்தும். பிளீச்சிங் தற்காலிகமான நிறத்தை தந்தாலும், அடிக்கடி உபயோகம் செய்தால் முகத்தில் கருப்பு நிறத்திலான படைகள் கட்டாயம் ஏற்படும். இயற்கையான முக பொலிவும் பாதிக்கப்படும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Face Beauty Tips Tamil Girls Highly Concentrated Should Given Below


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->