இதை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?!
dont drink water after eating karumpu
கரும்பு தின்னக் கூலியா? அதுவும் தமிழர்களுக்கு சொல்லவா வேண்டும், கரும்பு என்றாலே நமக்கு சின்ன வைத்து நினைவுகள், நம் கண் முன்னே வந்து நின்றுவிடும், கரும்பை பிடிக்காதவர்கள் என்று, நம்மில் யாரும் இருக்க முடியாது. பல் இல்லாதவர்கள் கூட ஆசைப்படும் உணவு தான் கரும்பு.
பொங்கல் என்றாலே கரும்பு தான் நாம் அதிகமாக உண்ணும் பொருளாக இருக்கும். சிலர் கரும்பை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால் கரும்பை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது தவறு என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆமாம். கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வாய் வெந்து போய்விடும். இதற்க்கு காரணம் கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இதன்காரணமாக, இந்த சுண்ணாம்பும் நம் உமிழ் நீரும் இணைந்து வேதிவினையாற்றுகிறது.
அந்த நேரத்தில், நாம் தண்ணீர் குடித்தால், நமது நாக்கில் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் நிகழ்வு ஏற்படுகிறது. இதனால், நாக்கு வெந்து விடுகிறது. இதனால் கரும்பு சாப்பிட்டு முடிந்து 15 நிமிடம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும்.
English Summary
dont drink water after eating karumpu