திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கையினை இனிதே துவங்கி., துணையின் முகத்தில் சிறிய கவலைகள் கூட துவங்கிவிடாமல் அன்பால் கொஞ்சும் காலம் அது. இந்த தருணத்தில்., தம்பதிகள் அன்பு ஆற்று வெள்ளம் போல பெருகி இருக்கட்டும். தாம்பத்திய இன்பத்தில் இரு உடலும் உருகி கறையட்டும். தாம்பத்யத்திற்கான பணிகளை செய்ய நேரத்தினை திட்டமிடுங்கள். திருமணம் முடிந்த தருணத்தில் அன்பை கொண்டாடும் சமயத்தில்., காற்றுகள் கூட நுழையும் இடைவெளியை கூட தம்பதிகள் தருவதில்லை. திருமணம் நிறைவு பெற்ற வருடத்திற்கு உள்ளாகவே., தம்பதிகளுக்குள் குழந்தை வேண்டாம் என்ற எண்ணமும் வரும். இது தம்பதியர்களின் விருப்பத்தை பொறுத்து மாறுபடும்.
இவ்வாறான தம்பதிகள் கரு உருவாகுதலை தடுக்க விரும்பும் பட்சத்தில்., இதற்கான பாதுகாப்பான முறைகள் குறித்து கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். சரியான விழிப்புணர்வு ஏதும் இல்லாமல்., கரு உருவாகிய பின்னர் கருக்களை கலைப்பதாக கூறி., கருக்கொலை செய்வது நல்லதல்ல... கருக்கலைப்பு செய்வதால் உடல் நலமும்., மனநலமும் வெகுவாக பாதிக்கும். மேலும்., குழந்தையின் மீதுள்ள ஆர்வமானது அதிகரித்து., பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். மருத்துவரின் தகுந்த ஆலோசனைக்கு ஏற்ப கரு உருவாகுதலை தடுப்பது நல்லது. ஆண்களிடம் கோடிக்கணக்கான உயிரணுக்கள் நிறைந்துள்ளது. இவை எப்போதும் உற்பத்தியாகும் என்பது மறைக்க முடியாத கூற்றாகும்.
கோடிக்கணக்கான உயிரணுக்கள் ஆணிடம் இருந்தாலும்., பெண்ணின் கருமுட்டை இல்லையேல் எதுவும் இல்லை. இந்த விஷயத்தை பொறுத்த வரையில்., பெண்ணின் கருப்பையில் மாதத்திற்கு ஒரு கருமுட்டை மட்டுமே உருவாகும். மாதவிடாய் நிகழ்ந்த 10 ஆவது நாட்களில் இருந்து 20 நாட்களுக்குள் மட்டுமே கருமுட்டை வெளியாகும். உயிருக்காக போராடும் இரு உடல்களும்., வீரத்தின் விளைவாகவும்., வேகத்தின் விளைவாகவும் கருமுட்டையை அடைந்து உயிராக மலர்கிறது. தாம்பத்திய விளையாட்டின் உச்ச கொண்டாட்டம் மற்றும் வரம் தான் குழந்தை... இன்றுள்ள பெரும்பாலான தம்பதிகள் குழந்தை வரனிற்காக ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இன்னும் சில தம்பதிகள் குறைந்தபட்சமாக ஒரு வருடத்திற்காவது குழந்தை பிறப்பை தள்ளிப்போட வேண்டும் என்று விரும்புகின்றனர். குழந்தை பிறப்பை தள்ளி வைக்க விரும்பும் தம்பதிகளுக்கு., கரு உருவாகுதலை தடுக்கும் முறைகள் குறித்து அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். பொதுவாக பெண்ணின் கருப்பையில் இருந்து வெளியாகும் கருமுட்டையானது சுமார் 24 மணிநேரத்திற்கு உயிருடன் இருக்கும். தாம்பத்தியத்தின் மூலம்க பெண்ணின் கருப்பை வாய்க்குள் செலுத்தப்படும் ஆணின் உயிரணு சுமார் 48 மணிநேரம் முதல் 72 மணிநேரம் வரை உயிருடன் இருக்கும். பெண்ணுடைய கருமுட்டை உயிர்வாழும் 24 மணிநேரத்தில்., ஆணின் உயிரணு சேரும் பட்சத்தில் குழந்தை உருவாகும்.
இந்த சமயத்தில்., பெண்ணின் கருமுட்டை எப்போது வெளியாகும் என்ற சந்தேகமும் எழும்..... மாதவிடாய் சுழற்சி முடிந்த 10 ஆவது நாளில் இருந்து 20 நாட்களுக்குள் கருமுட்டை வெளியாகும். மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும் பெண்களுக்கு இடைவெளி சீராக இருக்கும். மாதவிடாய் சுழற்சியின் நாட்கள் மாற மாற., கருமுட்டை வெளியேறும் நாட்களின் கணக்குகளும் மாறும். மனைவியுடன் தாம்பத்தியத்தில் மாதவிடாய் சுழற்சி முடிந்த முதல் ஐந்து நாட்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சி துவங்கவுள்ள ஐந்து நாட்கள் முன்னதாக தாம்பத்தியம் மேற்கொண்டால் குழந்தை உருவாகாது. மாதவிடாய் சுழற்சியின் நாட்களின் எண்ணிக்கையை அறிந்து., மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். மேற்கூறியுள்ள நாட்களில் தாம்பத்தியம் எந்த விதமான தயக்கமும் இன்றி மேற்கொள்ளலாம்.
இன்னும் சிலர்., ஆணின் உயிரணு கருப்பைக்குள் செல்லும் பட்சத்திலேயே தானே., குழந்தை உருவாகும்? உயிரணு கருப்பைக்குள் செல்லாவிட்டால் எவ்வாறு உயிரணு உருவாகும்? என்று யோசனை செய்வதும் உண்டு... பொதுவாக தாம்பத்திய தருணத்தில் ஆணின் உச்சகட்ட வெளிப்பாடாக உயிரணு வெளியேறும் சமயத்தில்., ஆணுறுப்பை - பெண்ணுறுப்பிற்குள் இருந்து வெளியே எடுத்துவிட்டால் குழந்தை உருவாகாது என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இன்னும் சிலர் குழந்தை உருவாகுதலை தடுக்கவும் இதனை செய்து வருகின்றனர். இந்த முறை முற்றிலும் பாதுகாப்பானது அல்ல... சில எதிர்பாராத உச்சகட்ட தாம்பத்திய தருணம் மற்றும் தாம்பத்திய நிலைகளால் கருப்பைக்குள் உயிரணு செல்லும் வாய்ப்புகள் உள்ளது.
மேலும்., தாம்பத்திய தருணத்தில் குழந்தை உருவாகுதலை தடுக்க காண்டமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காண்டம் பக்க விளைவுகள் இல்லாத மற்றும் பாதுகாப்பான தாம்பத்தியத்திற்கு உகந்தது என்றாலும்., தாம்பத்தியத்தின் போது செய்யப்படும் செயல்பாடுகளால் காண்டம் கிழிய நேரிட்டால்., உயிரணு கருப்பைக்குள் கட்டாயம் சென்றுவிடும். தாம்பத்திய சமயத்தில் காண்டத்தை சரியாக ஆணுறுப்பில் பொருந்தியிருக்க வேண்டும்.. சரியாக பொறுத்தப்படாமல்., காற்று புகும் வாய்ப்புகள் இருந்தால்., கட்டாயம் காண்டம் கிழிந்துவிடும். சரியான முறையில்., இறுக்கமாக காண்டத்தை ஆணுறுப்பில் பொருத்திவிட்டு தாம்பத்தியத்தை மேற்கொள்ளலாம்.
எதிர்பாராத சூழ்நிலையில் தாம்பத்திய தருணத்தில் காண்டம் கிழிந்துவிட்டால்., மருத்துவரின் ஆலோசனைப்படி கான்ட்ராசெப்ஷன் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். தாம்பத்தியத்திற்கு பின்னர் சுமார் 48 மணிநேரத்திற்குள் இந்த மாத்திரையை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். கரு உருவாகுதலை தவிர்ப்பதற்கு., மருத்துவர்கள் பெண்களிடம் ஹார்மோன் மாத்திரைகளை பரிந்துரையும் செய்கின்றனர். தாம்பத்தியத்தின் போது பெண்ணுடைய பிறப்புறுப்பில் மாத்திரையை வைத்து தாம்பத்தியம் மேற்கொண்டால் கரு உருவாகுதலை தடுக்க இயலும் என்றாலும்., இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நீண்ட நாட்களுக்கு இம்மாத்திரைகளை பெண்கள் எடுத்து கொள்ள கூடாது.
இன்றுள்ள நிலையில்., பெண்களுக்கு கருத்தடை சாதனமாக Diaphragm -ஐ பயன்படுத்தலாம். Diaphragm என்பது இரண்டு இன்ச் முதல் நான்கு இன்ச் வரை., வட்ட வடிவில் இருக்கும் வலையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். இம்மாதிரியான பொருளை உபயோகம் செய்யும் பெண்கள்., துவக்க காலத்தில் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப பொருத்துவது நல்லது. பின்னாளில் பெண்கள் தாமாகவே., தனது பிறப்புறுப்பில் இதனை பொருத்தி தாம்பத்தியம் மேற்கொள்ளலாம். இந்த Diaphragm சாதனம் மூலமாக உயிரணு கருமுட்டையுடன் இணைவதை தடுக்க முடியும். இதனை உபயோகம் செய்து தாம்பத்தியம் மேற்கொண்ட பின்னர்., Diaphragm - ஐ சோப்பு போட்டு சுத்தம் செய்த பின்னர் மீண்டும் உபயோகம் செய்யலாம். இந்த சாதனத்தின் விலை அதிகம் என்றாலும்., பெண்களை பொறுத்த வரையில் இது பாதுகாப்பான மற்றும் பிரச்சனை இல்லாத ஒன்றாகும்.
இதற்கு அடுத்தபடியாக இருப்பது Cervical cap ஆகும். இதுவும் கருத்தரிப்பை தடை செய்கிறது. பெரும்பாலான ஆண்கள் தாம்பத்தியத்தின் போது காண்டம் பயன்படுத்த விரும்பாத பட்சத்தில்., Spermicide என்கிற ரசாயன பொருளை தங்களின் பிறப்புறுப்பில் தடவிக்கொண்டு., தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். Spermicide நுரை., க்ரீம் மற்றும் மாத்திரை போன்ற வடிவத்திலும் கிடைக்கும். இந்த Spermicide - ஆல் ஆண்களுக்கு அலர்ஜி ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது என்பதால்., மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப கருத்தடை சாதனத்தை தேர்வு செய்வது நல்லது. இதனை தவிர்த்து IUD என்று அழைக்கப்படும் Intrauterine device என்ற சிறிய வடிவிலான., பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட சாதனமும் உள்ளது. இந்த IUD -யை பொருத்திக்கொள்வதால் கரு உருவாக்கத்தை தவிர்க்க முடியும். மேலும்., காப்பர் டி கருத்தடை சாதனமும் பயன்பாட்டில் உள்ளது.
இவ்வாறானவற்றை உபயோகம் செய்து கொண்டால் வலி மற்றும் அதிகளவு இரத்தப்போக்கு., பக்க விளைவுகள் கட்டாயம் ஏற்படும். இதனை போன்று கருத்தடை மாத்திரைகளான ஹார்மோன் மாத்திரைகளும் பக்க விளைவுகளை மோசமாக ஏற்படுத்தும். தம்பதிகளுக்கு ஓர் விழிப்புணர்வாக., திருமணம் முடிந்த சில மாதங்களுக்கு மட்டுமே கரு உருவாகுதலை தள்ளி போடலாம். இந்த குறைந்த கால இடைவெளிக்கு இயற்கையான மற்றும் எளிமையான முறைகளை பயன்படுத்தலாம். வருடக்கணக்கில் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது., பின்னாளில் குழந்தையின்மை பிரச்சனைக்கும் வழிவகை செய்யும்... தாம்பத்யத்திய இன்பத்தை அடுத்தடுத்து அனுபவிக்க எவ்வாறு விரும்புகிறீர்களோ? அதனைப்போன்று அதிக நாட்கள் கரு உருவாகுதலை தள்ளி போடாமல் இருக்க வேண்டும்... தாம்பத்திய அக்கறையை போன்று., உடல் நல அக்கறையும் அவசியம்.. கருத்தடைக்காக எந்த பொருள் உபயோகம் செய்யப்பட்டாலும்., அது அடுத்தடுத்த தாம்பத்திய இன்பத்தை குறைத்து., உடல் நலத்தையும் குறைத்துவிடும் என்பதே நிதர்சனம்... புரிந்து கொண்டு செயல்படுங்கள்..
Tamil online news Today News in Tamil