" என்பதிலும் பதினெட்டு " இளமையை சொந்தமாக்கி கொள்ள எளிய வழி..!  - Seithipunal
Seithipunal


வெயிலில் அதிகம் சுற்றி திரியும் போது, சருமமானது கருமை நிறமடையும். எனவே அத்தகைய கருமையை போக்க, தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்து பாருங்கள். இதன் பலன் நன்கு தெரியும். 

முதுமை தோற்றத்தைத் தடுக்கும். தற்போதுள்ள மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், நிறைய பேருக்கு இளம் வயதிலேயே, சரும சுருக்கம் ஏற்பட்டு முதுமை தோற்றத்தை அடைகின்றனர். எனவே இன்றைய இளம் வயதினர் தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தினால், இத்தகைய பிரச்சனையைத் தடுக்கலாம். 

பருக்கள் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் அதிகம். அத்தகையவர்கள் கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தடவி வந்தால், அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள், முகப்பருவை போக்கிவிடும்.

Image result for aloe vera seithipunal

நகங்கள் அடிக்கடி உடைகிறதென்றால் கற்றாழை ஜெல்லை நகங்களுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால், நகங்கள் வலிமையடையும்.

கற்றாழை ஜெல்லானது சிறந்த சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும். அதற்கு இதனை சருமத்தில் தினமும் தடவி வர வேண்டும்.

கற்றாழையின் நன்மைகளில் ஒன்று தான் உதடு வறட்சியைத் தடுப்பது. உதடுகள் வறட்சியடைந்து, உதட்டின் அழகே கெடுகிறதா? அப்படியானால் இரவில் படுக்கும் போது கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வாருங்கள். இல்லாவிட்டால், கற்றாழை ஜெல்லை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பகல் நேரத்தில் லிப் பாம் போன்றும் பயன்படுத்தலாம். 

கண்களில் உள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை போக்கி, அழகான கண்கள் வேண்டுமானால், தினமும் கற்றாழை ஜெல்லை கண்களுக்கு தடவி வாருங்கள். இதனால் நல்ல மாற்றம் தெரியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beauty tips for being always young


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->