திருமண கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம்.. உத்ரபிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


திருமண கொண்டாட்டத்தில் மணமகன் சுட்டதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், பிராம்நகரைச் சேர்ந்தவர் மணீஷ் மதேஷியா . இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் மணமகனை அவரது நண்பர்கள் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

அப்போது, அங்கு வந்த மணமகனின் நண்பர் பாபுலால் யாதவ் (26), தன்னிடம் இருந்த துப்பாக்கியை மணீஷிடம்  கொடுத்து வானத்தை பார்த்து மேல் நோக்கி சுடுமாறு கூறியுள்ளார். அவர் சுடும் போது, எதிர்பாராத விதமாக , நண்பர் பாபுலால் யாதவின் தலையில் பாய்ந்தது. 

அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாபுலால் யாதவின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மணீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Shorted death in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->