காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரம்.! கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர்.!
Youth murder the college girl with a knife in bangalore
பெங்களூருவில் காதலை முறித்துக் கொண்டதால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு ராஜனகுண்டே பகுதி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஓட்டுனர் மதுசந்திரா(26). இவர் திருமணமானவர். இந்நிலையில் இவருக்கும், சானுபோகனஹள்ளி பகுதியை சேர்ந்த ராஷி(19) என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் தனக்கு திருமணமானதை மறைத்து மதுசந்திரா காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் மதுசந்திராவுக்கு, ஏற்கனவே திருமணமானது ராஷிக்கு தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ராஷி, மதுசந்திராவுடனான காதலை முறித்துக் கொண்டார். இந்நிலையில் கல்லூரி முடித்துவிட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த ராஷி, மேய்ச்சலுக்காக விடப்பட்ட மாட்டை அழைத்து வர சென்றார். அப்பொழுது அங்கு வந்த மதுசந்திரா, ராஷியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த மதுசந்திரா மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஷியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராஷி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ராஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று காலை தலைமறைவான மதுசந்திராவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Youth murder the college girl with a knife in bangalore