35 வயது இளைஞர் காவல் துறையினரால் அடித்து கொலை?.. 100 க்கும் மேற்பட்ட உறவினர்கள் போராட்டம்.!!
youngster killed by police in andra pradesh
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுத்தப்பட்டுள்ளனர். மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் நடமாட்டத்தை கண்காணித்து, கட்டுப்பாட்டில் வைக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் சாலையில் 35 வயதுடைய வாலிபர் சென்று கொண்டு இருந்துள்ளார். இந்த இளைஞரை காவல் துறையினர் அழைத்து விசாரணை செய்து தாக்கியதாக தெரியவருகிறது. இதனால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த உறவினர்கள் சும்மர் 100 க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் செயலை கண்டித்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
youngster killed by police in andra pradesh