டிக் டாக் வீடியோ எடுத்த இளைஞன்! கடைசியில் நேர்ந்த விபரீதம்!! பதறவைக்கும் வீடியோ காட்சி!!
young man death for telangana
டிக் டாக் வீடியோ எடுக்க பலர் தங்கள் உயிரை விடுகின்றனர். மலையின் விளிம்பில் நின்றுகொண்டு வீடியோ எடுப்பது, ஓடும் பேருந்தில் தொங்கிக்கொண்டு வீடியோ எடுப்பது, இருசக்கர வாகனத்தில் இரு கைகளை விட்டுவிட்டு வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தங்கள் உயிரை விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் பிணகல் மண்டலம் கோனு கோப்பு என்ற இடத்தில் கோப்புலா தடுப்பணை உள்ளது. இங்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள், தடுப்பணையில் வடிந்து வரும் நீரில் ஆடிபாடியபடி டிக்டாக் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
திடீரென தடுப்பணையில் இருந்த வந்த நீரின் வேகத்தால் கால் தவறி கீழே விழுந்த தினேஷ், நீரில் அடித்துச் செல்லப்பட்டார். நீரில் அடித்து செல்லப்பட்ட தினேஷை தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பிறகு தினேஷ், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
English Summary
young man death for telangana