ஒருதலை காதல் விவகாரம்.! இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர்..!
Young man arrested for stabbing young woman to murder in Karnataka
கர்நாடக மாநிலத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை வாலிபர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள முந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(23). இவருக்கும், கனகமஜலு பகுதியை சேர்ந்தவர் உமேஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உமேஷ், ஜெயஸ்ரீயை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் உமேஷ் என் காதலுக்கு ஜெயஸ்ரீ மறுப்பு தெரிவித்து அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயஸ்ரீ தாய் கிரிஜா கடைக்கு சென்று நிலையில், வீட்டில் ஜெயஸ்ரீ மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இதையடுத்து கடைக்கு சென்ற கிரிஜா, வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்தில் கத்திக்குத்து காயத்துடன் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரிஜா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஜெயஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சந்தேகத்தின் அடிப்படையில் உமேஷை கைது செய்து விசாரணை நடத்தியதில், ஜெயஸ்ரீ காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை கத்தியால் குத்தி உமேஷ் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் உமேஷிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.
English Summary
Young man arrested for stabbing young woman to murder in Karnataka