இரவில் தனியாக சென்ற இளம் பெண்.. போதையில் வாலிபர் செய்த செயல்! வாலிபருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளம் பெண்!! - Seithipunal
Seithipunal


மும்பையில் உள்ள விலே பார்லே என்னும் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர். இவர் விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு, தன்னுடன் பணியாற்றும் ஊழியருடன் காரில் சென்று ராஜேந்திர பிரசாத் நகரில் கிறங்கி, சாலையில்நடந்தவாறு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த வழியில் போதையில் வந்த தினேஷ் என்னும் இளைஞர் அந்த இளம் பெண்ணை ஆபாசமாக திட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து சென்றுள்ளார்.  தினேஷை பின்தொடர்ந்த அந்த இளம் பெண் அவரது வீட்டை கண்டுபிடித்து தனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து அங்கே வருமாறு கூறியுள்ளார்.

அங்கு விரைந்துவந்த அந்த பெண்ணின் உறவினர்கள் தினேஷை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில்  ஒப்படைத்துளனர். இளம் பெண் ஒருவர் துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ய உதவிய சம்பவம் அந்த பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man arrest in mumbai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->