உயிருடன் புதைக்கப்பட்ட பெண்.! பாசனத்திற்காக பள்ளம் தோண்டிய போது அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


கோவாவில் துக்காராம் என்பவருடைய மனைவி நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்து இருக்கின்றார். இந்நிலையில் கூலித்தொழில் செய்து குடும்பம் நடத்தி வரும் அவர் மனைவியின் சிகிச்சையையும், தன்னுடைய மகனின் படிப்பு செலவையும் கவனித்து வந்து இருக்கின்றார். 

ஆனால், அன்றாடம் உடல்நலக்குறைவுடன் போராடும் மனைவிக்கு போதிய சிகிச்சையளிக்க பணமில்லை என்ற காரணத்தால், துக்காராம் அவரை கருணை கொலை செய்ய முடிவு எடுத்து இருக்கின்றார். இதற்காக நோயாளியான தனது மனைவியை அருகே இருக்கும், கிராமத்திற்கு அழைத்து சென்று, ஒரு கால்வாய் அருகே உயிருடன் குழி தோண்டி புதைத்துவிட்டு, அங்கேயே காவலுக்கு அமர்ந்து இருந்துள்ளார்.

அப்பொழுது அங்கே வந்த சில தொழிலாளர்கள் நீர் பாசனத்திற்காக குழிதோண்டும் பணியில் ஈடுபட ஆரம்பித்து இருக்கின்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த துக்காராம், உடனடியாக ஓடிச்சென்று பள்ளம் தோண்ட வேண்டாம் என்று அவர்களிடம் கெஞ்சி இருக்கின்றார். 
Image result for DEATH SEITHIPUNAL

ஆனால், துக்காராமை கண்டுகொள்ளாமல் தொழிலாளர்களின் குழிதோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று இருக்கின்றது. அப்போது பெண் ஒருவரின் சடலம் தட்டுப்படுவதை பார்த்த தொழிலாளிகள், அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். 

விரைந்து வந்த காவல்துறையினர், புதைக்கப்பட்டிருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, துக்காராமிடம் விசாரணை மேற்கொண்ட போது, வறுமையின் காரணமாக தான் உயிருடன் புதைத்து விட்டேன் என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WOMEN MURDER BY HUSBAND IN GOA


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->