கொரோனா., ஆம்புலன்சில் சென்ற பெண் திடீர் மாயம்.! விசாரணையில் வெளிச்சமான உண்மை.!
women missing who confirmed affect by corona virus
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெங்களூரு அருகே பொம்மனஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றுள்ளார்.
ஆனால், அதன்பின் அந்த பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்று குடும்பத்தினர் காவல் நிலையத்தை நாடியுள்ளனர். மேலும், செல்போனை எடுத்துச் செல்ல அந்த பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் வந்தவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று புகார் அளிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அந்த பெண் குடும்ப பிரச்சினை காரணமாக வெளியே சென்று இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
மேலும் அவரே போலியாக ஆம்புலன்ஸ் ஒன்றையும் வர வைத்து அதன் மூலம் வீட்டிலிருந்து வெளியேறி இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். தற்போது அந்த பெண் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
women missing who confirmed affect by corona virus