பாஸ்பெஸ்டியுடன் தாய்.. திடீரென உள்ளே நுழைந்த மகன்.. பிறகு நிகழ்ந்த விபரீதம்.!
women killed her son for illegal love
இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு பெண் தனது காதலன் அசோக் என்பவருடன் கள்ளக்காதல் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் தனது காதலனுடன் உல்லாசமாக இருந்ததை அந்தப் பெண்ணின் ஒன்பது வயது மகன் நேரில் கண்டு இருக்கின்றான். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எங்கே தனது கணவரிடம் இதுகுறித்து கூறி விடுவானோ என்று பயந்து கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த வயலில் தூக்கி வீசி இருக்கின்றார்.
மாலை வீட்டிற்கு வந்த கணவன், மகனை காணவில்லை என்று மனைவியிடம் விசாரித்த பொழுது அவன் தனது அத்தை வீட்டிற்குச் சென்று இன்னமும் வீடு திரும்பவில்லை என்று கூறியிருக்கின்றார். அங்கும் இங்கும் மகனைத் தேடி அலைந்த அந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்போது குழந்தையின் உடல் அருகில் இருந்த வயலில் புதைத்து இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். அத்தை வீட்டிற்கு சென்றதாக மனைவி கூறியதால், அத்தையிடம் சென்று விசாரித்துள்ளனர். ஆனால், அவர் சிறுவன் வீட்டிற்கு வரவில்லை என்று கூறி உள்ளார்.
மேலும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பொழுது அவர்களுக்கு பல திடுக்கிடும் உண்மைகள் கிடைத்துள்ளது. அப்போது தாயிடம் மிகவும் கெடுபிடி விசாரணை நடத்தியதில், அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த தாயும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
women killed her son for illegal love