கணவனின் ரகசியத்தை கண்டறிந்த பெண்.! திருமணமான 2 மாதத்தில் ஏற்பட்ட விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


திருமணமான 2 மாதத்தில் புது மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த சந்திரபா என்பவருக்கு கடந்த இருபத்தி எட்டாம் தேதி மே மாதம் உமா என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து உமா கணவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்த நிலையில், நேற்றுமுன்தினம் கணவருடன் சண்டை இட்ட பின்னர் உமா சடலமாக வீட்டில் தொங்குவதாக உமாவின் தந்தைக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற உமாவின் தந்தை மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதுள்ளார். அதன்பின்னர், காவல்துறையினர் அளித்துள்ள புகாரில் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என்னுடைய மகளை எனது மருமகன் கடுமையாக துன்புறுத்தி வந்தார். 

உமா சாவதற்கு முன்பாக எனக்கு போன் செய்தார். தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசியதாகவும், அதனை தட்டிக் கேட்பதற்கு என்னை அடித்து உதைத்த தாகவும் அவர் தெரிவித்தார். என் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு ஒரு தற்கொலையை நாடமாடுகின்றனர் என்று புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரிக்கையில் சந்திரபா தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women killed by her husband in 2 month


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->