கட்டில் மேல் பெண்.. கொடூரமான விஷயம் செய்து பேய் ஓட்டிய சாமியாரால், பறிபோன உயிர்.!  - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தில் ராஜிதா என்ற ஜெய்ப்பூரை சேர்ந்த இருபது வயது மதிக்கத்தக்க பெண் மல்லேஷ் என்பவரை கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து உள்ளார். அதன் பிறகு இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணின் பெற்றோர் காலமாகினர். அதன் பிறகு அந்த பெண்ணிற்கு மனநலம் பாதிப்படைந்ததால் ராஜிதாவின் வீட்டினர் அவரை சாமியாரிடம் அழைத்துச்சென்றுள்ளனர். 

அந்த சாமியார் ராஜிதாவிற்கு பேய் பிடித்திருப்பதாக சொல்லி அந்த பேயை விரட்டுவதாக கூறி அந்த பெண்ணை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார். இவை அனைத்தையும் அவரின் குடும்பத்தினர் வேடிக்கைப்பார்த்து வந்துள்ளனர். இதனால், அந்த பெண்ணிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. 

உடனடியாக அவரின் குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜிதா உயிரிழந்தார். ஆகவே, அந்த பெண்ணை துன்புறுத்தி அவர் உயிரிழக்கும் அளவிற்கு கொண்டு சென்ற சாமியார் ஷியாம் மீது ராஜிதா குடும்பத்தினர் புகாரளித்ததன் பெயரில் அந்த சாமியாரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ராஜிதாவின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பிய காவல்துறையினர் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women killed by a men who giver torched 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->