பெண் மருத்துவர் போலவே மற்றொரு பெண் பலாத்காரம் செய்து உயிருடன் எரிப்பு.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கொள்ளப்பட்டது போன்ற மற்றொரு சம்பவம் இந்தியாவில் மீண்டும் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சொந்த என்ற கிராமத்தில் 23 வயதான இளம் பெண் ஒருவர், அதே கிராமத்தை சேர்ந்த 2 கயவர்களால்  கடந்த மார்ச் மாதம் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில், அந்த வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்தார்.

அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அப்பெண்ணை வழிமறித்து தூக்கிச் சென்று அவருக்கு தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதற்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலமாக அந்த பெண் டெல்லி கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள சப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை கண்காணிப்பாளரான சுனில் குப்தா தெரிவித்துள்ளார். 

மேலும் அந்த பெண் உயிர்பிழைப்பதற்கு குறைந்த அளவிலான வாய்ப்புகளே உள்ளதாகவே தெரிகிறது.

தீ வைப்பதற்கு முன், அந்த கும்பல் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக முந்தைய வழக்கில் கைதான 2 பேர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women has rapped and burn in unnav district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->