#வீடியோ: பேய் ஓட்டுகிறேன் என இளம்பெண்ணிடம், சாமியார் கொடூர செயல்.!  - Seithipunal
Seithipunal


பேய், பிசாசு, காட்டேரி எல்லாம் வெறும் மூடநம்பிக்கை என்று பலர் தெரிவித்தாலும், பேய், பிசாசு இருக்கிறது என்று நம்பி பல்வேறு செயல்களில் ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இதனை தனக்கு சாதகமாக பேய் பிடித்து விட்டதாக கூறி பேய் பிடித்தவர்கள் தெரிவிக்கும் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்து பேய் ஓட்டுகிறேன் என சிலர் போலி சாமியார்கள் அடித்து துன்புறுத்துவது, பல்வேறு லீலைகள் முடிவது என நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இது போல தான் கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கர்நாடக கோலார் மாவட்டத்தில், ஆபாணி என்ற பகுதியில் மாரிகாம்பா என்ற அம்மன் கோவிலின் பூசாரியாக இருக்கும் மல்லிகார்ஜுன் என்பவர் ஒரு பெண்ணிற்கு பேய் ஓட்டுவதாக தெரிவித்து சரமாரியாக சவுக்கால் அடிக்கின்றார்.

அந்தப் பெண் கதறி அழுது தன்னை அடிக்க வேண்டாம் என ஓலம் இட்டபொழுதும், சாமியார் விடுவதாக இல்லை. பெண்ணின் தலைமுடியை இழுத்து பிடித்து, சவுக்கால் அடி, அடி என அடித்து துன்புறுத்தும் அந்த காட்சியை பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. தற்போது அதற்கான காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women harassment in karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->