தாய்மைக்கு முன்னே எல்லாம் தூசு தான்.! விளையாட்டிற்கு நடுவில் பெண் செய்த காரியம்.!  - Seithipunal
Seithipunal


மிசோரத்தில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த பொழுதே தன்னுடைய குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அதிர்ஷ்டம் அடித்து இருக்கின்றது.

மிசோரத்தை சேர்ந்த லால்வெண்ட்லுங்கி (Lalventluangi) என்ற பெண் வாலிபால் குழுவைச் சேர்ந்தவர். இவர் விளையாடுவதற்காக தன்னுடைய ஏழு மாதக் குழந்தையுடன் விளையாட்டு அரங்கிற்கு வந்துள்ளார். அப்பொழுது விளையாட்டின் போது சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு தன்னுடைய குழந்தைக்கு பாலூட்டி இருக்கின்றார்.

விளையாட்டிற்கு நடுவே தன்னுடைய கடமை தவறாது, குழந்தைக்கு பாலூட்டிய இந்த வீராங்கனையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இந்த செய்தியானது அந்த மாநில விளையாட்டு துறை அமைச்சர் ராபர்ட் ரோமவிய ரொய்டேவின் பார்வைக்கு சென்றுள்ளது.

எனவே அந்த பெண்ணின் கடமை உணர்வை பாராட்டி அவருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கினார். மேலும், வீராங்கனை என்ற கர்வம் சிறிதும் இல்லாமல், ஒரு சிறந்த தாயாக தன்னுடைய கடமையை செய்த அந்த பெண்ணிற்கு இணையத்தில் பாராட்டு மழை பொழிந்து வருகின்றது.

இப்படி ஒரு அர்ப்பணிப்பும், தைரியமும் கொண்ட இந்த பெண்ணின் இரட்டை பொறுப்புகளில் இருந்தும் அவரது தாய்மை பண்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WOMEN FEEDING MILK FOR BABY IN GROUND


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->