பேங்குக்கு சென்ற பெண், பிணமாக திரும்பிய சம்பவம்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்.!
Women death in kerala bank
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் இயங்கி வந்த தனியார் வங்கி ஒன்றுக்கு பீனா பால் என்ற பெண் சென்றுள்ளார். அப்போது காரில் எதையோ மறந்து விட்ட அவர் அதனை எடுக்க வேகமாக வங்கிக்கு வெளியே சென்றுள்ளார்.
வாசலில் கண்ணாடி கதவு இருப்பதை கவனிக்காமல் வெற்றிடம் என நினைத்து அவர் வேகவேகமாக வாயிலை கடக்க முயற்சித்தபோது கண்ணாடிக் கதவில் மோதி கண்ணாடி துகள்கள் உடைந்து, அவரது உடலிலும், வயிற்றுப் பகுதியிலும் குத்தி இருக்கின்றது. இதனால் அவர் பலத்த காயமடைந்து உள்ளார்.
அங்கிருந்த பெண் வங்கி ஊழியர்கள் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கியின் கண்ணாடி கதவு மிகவும் மெல்லியதாக இருந்தது தான் தற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Women death in kerala bank