சமையலறையில் பெண் சடலம்..!! அதிர்ச்சியில் உறவினர்கள்...!!
Woman murdered in kerala
கேரளாவில் மாயமான பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கேரள மாநிலம், இடுக்கி பகுதிடை சேர்ந்தவர் சிந்து (வயது44). இவர் கணவரை விட்டு பிரிந்து தனது 2வது மகனுடன் தனியே வசித்து வருகிறார். இதற்கிடையில், இவருக்கும் இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணிக்குன்னேல் பெனோய் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளைடவில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12 தேதி சிந்து தீடீரென மாயமானார். சிந்துவை அவரது உறவினர்கள் தேடியும் அவர் கிடைக்கவிலை. இந்நிலையில், சிந்துவுடன் வசித்து வந்த பெனோய்க்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சிந்து குறித்த தகவல் ஏதும் கூறாமல் அவரும் மாயமானார்.இதனால் சந்தேமடைந்த அவரது உறவினர்கள் பெனோய் வீட்டிற்கு சென்று சிந்து பற்றிய தகவல் ஏதேனும் கிடைக்குமா என தேடியுள்ளனர்.
அங்கு புதியதாக சமையலறையில் அடுப்பு ஒன்று கட்டப்பட்டிருந்தது இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அந்த அடுப்பை நகர்த்தி பார்த்த போது அங்கு புதியதாக போடப்பட்ட சிமெண்ட் தரையை உடைத்த போது சிந்துவின் சடலம் இருந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்வப இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிந்துவின் உடலை கைப்பற்றினர்.அவரின் ஆடைகள் முழுவதும் களையப்பட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இருந்தது. மோப்பநாய் கண்டுபிடிக்காமல் இருக்க அந்த பகுதிகளில் மிளகாய் பொடி தூவப்பட்டிருப்பதும் தெரியவதுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.