கொலுசுக்காக கொலை செய்யப்பட்ட பெண்.. ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


வெள்ளி கொலுசுக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் கன்குபாய் (45). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கமாக தனது கணவனுக்கு மதிய உணவு எடுத்து செல்வார். இந்நிலையில், சம்பவதன்று அவரின் கணவருக்கு உணவு எடுத்து சென்றுள்ளார்.

வயல்வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் கணவர் மனைவி குறித்து குழந்தைகளிடம் கேட்டுள்ளார். மதிய உணவு கொடுக்க சென்ற அவர் திரும்ப வரவில்லை என குழந்தைகள் கூறியுள்ளனர்.

இதனை கேட்ட அவர் அதிர்ச்சியடைந்த அவர் மனைவியை தேடியுள்ளார். ஆனால், அவரை காணவில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

காட்டுபகுதியில் அந்த பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பெண்ணின் சடலம் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குபதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் கால் கொலுசிற்காக கொலை நடந்ததாக தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Murder In Rajastan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->