பிணங்களுடன் வாழ்ந்து வந்த பெண்!! அதிர்ச்சியில் உறைந்த காவல் துறையினர்!! வெளியான பகீர் தகவல்!!! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் அங்கு சென்று பார்த்தனர். தீபா என்பவர், அவரது தாயார் புஷ்பா ஸ்ரீவாஸ்தவா மற்றும் சகோதரி விபா ஆகியோரது உயிரிழந்த உடல்களுடன் வசித்து வருவது தெரிய வந்தது.

தீபா தந்தையின் பிறப்பிற்கு பிறகு, அவரது தாயார் மற்றும் இரண்டு சகோதரியுடன் வசித்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு சகோதரி இறந்துவிட்டார். இதனால் தீபா, அவரது தாயார் மற்றும் சகோதரி இருவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். மன ரீதியாக தீபா மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தாயார் புஷ்பா மற்றும் சகோதரி விபா இறந்துவிட்டார்கள். தீபா அவர்களின் சடலங்களுடன் வசித்து வந்துள்ளார். எலும்புகள் தெரியும் அளவுக்கு உடல்கள் சிதைந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman lived with death bodies


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->