கேரளா || தொடர்ந்து கனமழை.. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக உபரிநீர் திறக்கப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து பாலக்காடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பாலக்காடு மாவட்டம், கோங்காடு பகுதியில் வினோத் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவரது மனைவி மல்லி (28) இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும், வினோத் படுகாயமடைந்தார்.  தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Death after hose collapse


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->