குண்டா இருக்க பொண்ணுங்கல்லாம் சரக்கடிக்கணும்.. கேடுகெட்ட கணவனின் கொடுமை.. அதிரடி காட்டிய பெண்மணி.!!
wife torture by husband to drink Liquor Alcohol
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் சிக்கமாவள்ளி பகுதியை சார்ந்தவர் ரங்கநாத். இவருக்கும், ஒரு பெண்மணிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த பெண்ணிற்கு 27 வயதாகும் நிலையில், ரங்கநாத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
திருமணம் முடிந்த துவக்கத்தில் கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கணவன் - மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை எழுந்துள்ளது. மேலும், பெண் உடல் எடை அதிகமாக இருக்கிறார் என்று கூறி, அவரிடம் ரங்கநாத் மற்றும் அவரது பெற்றோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளனர்.
இந்த விஷயத்திற்கு பெண் துவக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெண்மணியை கேளிக்கை விடுதிகளுக்கு ரங்கநாத் அழைத்து சென்று வந்துள்ளார். மேலும், அங்கு மது அருந்த வற்புறுத்தியும் வந்துள்ளார். இதுமட்டுமல்லாது கேளிக்கை விடுதியில் வைத்து மனைவியை ஆபாசமாக புகைப்படமும் எடுத்துள்ளார்.
கேளிக்கை விடுதியில் மது அருந்தாத காரணத்தால், வீட்டிற்கே மதுபானம் வாங்கி வந்து மது அருந்த கூறி ரங்கநாத் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான பெண்மணி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
wife torture by husband to drink Liquor Alcohol