அஞ்சனாவின் ஆசையை நிறைவேற்ற முடியாத கணவன்.. கணவன் இல்லாத நேரத்தில் நடந்த விபரீதம்.!!
Wife suicide husband is arrest
உத்தரபிரதேச மாநிலத்தில் அமித் என்பவருக்கு கடந்த மே 13ஆம் தேதி அன்று அஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இருவரும் இரண்டு மாதம் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் இவர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்றை நடத்த முடிவு செய்திருந்தனர்.
அதற்காக அஞ்சனா புதிதாக ஒரு புடவையை வாங்கி தருமாறு அமித் இடம் கேட்டு உள்ளார். அஞ்சனா ஆசையாக கேட்ட புடவை வாங்கித் தருவதற்கு அமித் மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமித் வெளியில் சென்றுவிட்டார்.
அமித் தனது ஆசையை நிறைவேற்றவில்லை என்ற வேதனையில் அஞ்சனா கணவன் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் வெளியில் சென்றிருந்த அமித் வீடு திரும்பும்போது மனைவி அஞ்சனா தூக்கில் தொங்குவதை பார்த்து கத்தி அழுதார். அதன்பிறகு அஞ்சனாவின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகள் இறந்ததை அறிந்த அஞ்சனாவின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
அமித் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னுடைய மகளை கொலை செய்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து தற்கொலை குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
Wife suicide husband is arrest