ஆசையாக காதலியுடன் பைக்கில் சென்ற கணவனை அசால்ட்டாக பிடித்த மனைவி.. ரோட்டில் நடந்தேறிய களபேரம்..!!  - Seithipunal
Seithipunal


லகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் அவர்களது காதலி மற்றும் காதலனுக்கு பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். இந்த நிலையில் பீஹாரில் உள்ள ஒருவர் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பைக்கில் சென்றிருக்கிறார்.

இதனை அவரது மனைவி பார்த்துவிட, பின்னாலேயே விரட்டி சென்று கையும் களவுமாக பிடித்துள்ளார். பின்னர் ஒரு பக்கம் காதலி, மறுபக்கம் மனைவி என்று சக்கரத்தில் சிக்கிய எலி போல கணவர் தவித்துக் கொண்டிருந்தார். அவரது மனைவி வார்த்தைகளால் விளாசி கொண்டிருந்தார்.

இந்த, கலவரத்தை பார்த்த போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதில் போலீசாரிடம் மனைவி, தங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றது. இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர், குழந்தைகள் பிறக்கும் வரை இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம். ஆனால் தற்போது இவர் மாறிவிட்டார், என்னிடம் அன்பு காட்டுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கணவரிடம் விசாரித்ததில் காதலர் தினத்தன்று காதலியை வெளியே அழைத்துச் செல்வதற்காக வந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில், மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife caught husband going with lover


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->