பாஜக பேரணி கூட்டத்தில் கற்கள் வீசி தாக்குதல்... காவல்துறை குவிப்பு.!
West Bengal Kolkata BJP Party Campaign Stone Attack
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், பாரதிய ஜனதா கட்சியினர் பேரணி சென்றனர். இதன்போது, மத்திய அமைச்சர் தேபஷ்ரி சவுதாரி மற்றும் பாஜக மேற்கு வங்க தலைவர் திலீப் கோஷ், சுவேந்து ஆதிகாரி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பேரணியின் போதே, திடீரென பாரதிய ஜனதா கட்சியினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரசின் கொடியை வைத்திருந்த சிலர், திரும்பி செல்ல கூறி முழக்கமிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்படவே, காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், பேரணிக்கு பாஜக சார்பில் அனுமதி பெறப்பட்டு இருந்த சூழலில், கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
West Bengal Kolkata BJP Party Campaign Stone Attack