கண்ணீர் விட்டு கதறிய தந்தை.. மனமிறங்காத மருத்துவர்கள்.. இறுதியில் நடந்த விபரீதம்.!
west bengal baby death
மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜூன் 11 ஆம் தேதி அப்ஜித் மாலிக் என்பவரின் மனைவிக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்து இரண்டு நாட்களில் உடல் நிலை மிகவும் மோசமானது.
இதன் காரணத்தால் மருத்துவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கும் படி பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிறந்த குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு அப்ஜித் மாலிக் மற்றும் அவரது மனைவி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் போராட்டத்தில் இருந்ததால் யாரும் பணிக்கு வரவில்லை. அதனால் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை உரியிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.