அடுத்த அறிவிப்பு : அந்த கேப்டன் பதவியில் இருந்தும் விலகுகிறேன்.! சற்றுமுன் விராட் கோலி அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


2014 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியதை அடுத்து, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளுக்கும் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். கேப்டன் விராட் கோலி மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். 

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில்  இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை குவித்து வருகிறார். எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த போட்டியிலும் சதம் அடிக்கவில்லை. அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க சிரமப்படுகிறார். கோலி தனது  பேட்டிங்கில் தடுமாறுவது தெளிவாக தெரிகிறது. 

மேலும், கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை பெற்றாலும், ஐசிசி தொடரை ஒரு முறை கூட வெல்லவில்லை என்பது குறைவாகவே உள்ளது. இதனிடையே, டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மாவிடம் கேப்டன் பதவி அளிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கருது தெரிவித்து வந்த நிலையில், துபாயில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு பின், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், சற்றுமுன் விராட் கோலி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடருக்கு பின், பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தான் விளையாடும் கடைசி போட்டி வரை பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat say ipl rcb team caption post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->