பிறந்து சிலமணிநேரம் ஆகிய பச்சிளம் குழந்தை விவசாய நிலத்தில் மீட்பு..! - Seithipunal
Seithipunal


பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிசு குழந்தைகள் கொலை செய்யப்படுவதும், தவறான உறவுகள் அல்லது திருமணத்திற்கு முந்தைய உறவில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக பலியாகி வருவதும், அனாதையாக தவித்து விடப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. 

குழந்தையை கொலை செய்ய மனமில்லாமல் சிலர், துணியில் சுற்றி அப்படியே கைவிட்டு நிலையில் செல்வதும் அரங்கேறி பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. நேபாள எல்லையில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் பச்சிளம் குழந்தை துணியில் சுற்றப்பட்டு வயல்வெளியில் புதைக்கப்பட்டுள்ளது. 

நேபாள எல்லையில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் கட்டிமா கிராமத்தில் வயல்வெளியில் சிலர் வேலை செய்துகொண்டிருந்தனர். அந்த சமயத்தில், துணியில் சுற்றப்பட்டு மண்ணிற்குள் அரைகுறையாக புதைக்கப்பட்ட, பிறந்து சிலமணி நேரமே ஆன சிசு ஒன்று இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

பின்னர் குழந்தையை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிய வரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Utttar Pradesh child dig in Agriculture land


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->