பள்ளியில் மாணவிகள் குறித்து அவதூறு பேசி அவமதித்த ஆசிரியை.. போராட்டத்தில் குதித்த மாணவ - மாணவியர்கள்.! - Seithipunal
Seithipunal


மாணவிகளை அவமதித்த ஆசிரியைக்கு எதிராக பள்ளியில் பெற்றோர்கள் மற்றும் மாணவ - மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் லிசாரி கேட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேரை அழைத்த ஆசிரியை, அவர்கள் இருவரும் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டதாக கூறிஅடித்து உதைத்திருக்கிறார். 

இதன்பின்னர், மாணவிகள் இருவரையும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முன்னிலையில் அவதூறாக பேசி அழைத்து சென்று அவமதிப்பு செய்துள்ளார். இதன்பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவிகள் இருவரும், ஆசிரியை செய்த கொடூரத்தை பெற்றோரிடம் கண்ணீர்பட தெரிவித்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு சென்று ஆசிரியருக்கு கண்டிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாணவ - மாணவியரும் ஆசிரியைக்கு எதிராக போராட்டத்தை கையில் எடுத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் பள்ளிக்கு விரைந்து பேச்சுவார்த்தி நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். மாணவிகள் ஆசிரியையால் அவதிக்கப்பட்ட விவர அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UttarPradesh Meerut School Teacher Insulted 2 Girl Students about Lesbian sex Students Parents Protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->